Monday, January 17, 2011

கள்ளம்

பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .


மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.

அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.


தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .


அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.

நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.


கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.


கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.

இலை மறை

பெண் கல்,
ஆண் உளி,
சில பாகம் சிதைத்து தான் 
சிற்பம் கொணரும்.  


Monday, January 3, 2011

தெய்வம்

உடல் கிழிந்த 
வலி மகிழ்ந்து,
உயிர்  உணவாய்
தந்த தாய். 

Monday, December 13, 2010

நிலா தரிசனம்

யாருமில்லா சமவெளியில்
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்

கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்

மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே  வெளியே வா.

Tuesday, October 12, 2010

நிலைக்கும் புரியாதது...

வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .

மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.

நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது  " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும்  நிலைகச்செய்வது தான்"

Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது.