Monday, December 13, 2010

நிலா தரிசனம்

யாருமில்லா சமவெளியில்
குத்தும் குளிர் இரவில்
உனக்காக வெகுநேரம்
தனிமையில் நான்

கருமேகம் மறைக்க -முழு நிலவு
உன்னை தடுக்க
உன்னால் உருமாற
காத்திருக்கும் ஓநாய் நான்

மனிதனாய் மாற்ற வா
ஓநாய் உரு மாராவா
ஊளையிட இரவு அழைக்குது
முழுநிலவே  வெளியே வா.

Tuesday, October 12, 2010

நிலைக்கும் புரியாதது...

வெறி கொண்டு எழுவதேல்லாம்
வெற்றி கொண்டே விழும்
தவிப்பதெல்லாம் தவறி விழும் .

மிக உயரத்தை அளக்க முடியாது
மிக காற்றை ருசிக்க முடியாது
மிக கற்பனையை விளக்க முடியாது.

நிலைக்காதது தான் மானுட இனம்,
புரியாதது தான் கடவுளினம்.
புரிந்தது  " நிலைக்கச் செய்வது புரியாதது தான் "
நிலைப்பது "புரியவைப்பதும்  நிலைகச்செய்வது தான்"

Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது. 






எழுச்சி

நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.

எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்

உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.

Tuesday, October 5, 2010

Tuesday, September 28, 2010

கலியுகக் காதல்



பாவம் காதல் இன்று பாடாய் படுகிறது,
உணர்வு மறுத்த உலக இளைஞ்சர்களிடம் தவிக்கிறது.

கழிவறை சுகம் தான் காலைகடன் முடியும் வரை,
காதலும் சுகம் தான் தேகக் கடன் தீர்க்கும் வரை. 

இது போல அர்த்தங்கள் காதல் என்றும் கண்டதில்லை 
காதல் அழியும் கலியுகத்தை நான் என்றும் விரும்பவில்லை. 


Thursday, September 23, 2010

சிகரெட்





புகைக்கும் போதே,
புதைந்து  கொண்டிருக்கிறேன் .

Tuesday, July 20, 2010

கண்

இளமையின்   தூதர்கள்
மதனின் மைந்தர்கள்
கண்களே காதலை சேர்க்கும் கடவுள்கள் 

வெற்றி

இலக்கை நோக்கி  ஓடும் போது
முட்கள் கால்களுக்கு வலிப்பதிலையே 
ஓடி முடித்து வெல்லும்  போது 
வலித்தாலும் அது அழுவதில்லை

ரத்த பூமி


Friday, July 16, 2010

அன்பின் ஆழம்

முதல் காதல் தோற்கலாம்
விழி மூடி தூங்கலாம்
தொலை தூரம் போகலாம் - அதன்
நினைவுகள்  தொலையாது

உயிரோடு மோதிடும்
உணர்வோடு வாதிடும்
வயதோடு வளர்த்திடும் - அந்த
எண்ணங்கள் மறக்காது .

காதல் புரிதல்


நேரம்  ஊர்ந்து செல்ல 
முழுதாய் நானும் கொள்ள
கள்ளம் கடவுள் ஆனது 
பெண்மை காதல் தேடுது

ஈரக்காரணம்

தலைவரே ! வருக !

தாக்கம்


நாள் முழுவதும் அழுது விட்டேன்

அந்த ஒரு

ஏளன சிரிப்பால்