Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Thursday, February 3, 2011

புரிதல்

ஊழ்வினை உந்த என் இடம் மறந்தேன்
உன்னிடம் உன்னுள் ஒருநொடி மறந்தேன்
ஆணி  வேரென பூமி துளைத்து
ஆகாயம் தொட்ட காற்றாய் மகிழ்ந்தேன்
காதல் புரிந்ததில் காதல் புரிந்தது
தடையில்லா  அன்பில் புரிதல் வளர்ந்தது
த பதில் ஆ முன் அடி சுவைக்கும்
கவி இல்லா  தாள் என மனம் கிடக்கும்.