Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

Thursday, October 11, 2012

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம் 

Monday, April 23, 2012

என்ன இது


என்ன வலி இது போதும் போதும் 
கண்கள்  வற்றிவிட்ட குளமாய் மாறும் 
சுவாச குழலுக்குள்  ஏதோ அடைக்கும் 
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும், 

தூறல் நிற்கும்  வரை தூரம் நடந்தேன் 
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன் 
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன் 
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்..... 

Saturday, October 1, 2011

முரண்


விதவைக்கு வழி எங்கும் பூ தூவினர்
அவள் இறுதி ஊர்வலத்தில்.

Thursday, September 23, 2010

சிகரெட்





புகைக்கும் போதே,
புதைந்து  கொண்டிருக்கிறேன் .

Friday, July 16, 2010

தாக்கம்


நாள் முழுவதும் அழுது விட்டேன்

அந்த ஒரு

ஏளன சிரிப்பால்