Thursday, September 22, 2011

நாம் காதலிக்கவில்லை ...

உன் தூரத்து சிரிப்பால் கிளர்ச்சி ஆனேன்
காத்திருந்த போது  கவிஞன்ஆனேன்

தோள் உரச நடக்கும் போது மயக்கமானேன்
 ஆறுதல் காட்டும் போது அடிமையானேன்

முத்தமிடும் போது மோகமானேன் 
வேண்டாம் போ! என்ற போது வெறுத்து போனேன் 

நீ மட்டும் போதும் என்று பைத்தியமானேன் 
தாலி கட்டி உன் சொந்தமானேன் 

முதல் இரவில் காமமானேன்
பின் இரவில் பந்தமானாய் 

வருடங்கள் உருண்ட பின் என் நட்பானாய் 
முதுமையில் எனக்கு துணையானாய் 
இறந்த பின் என் தெய்வமானாய் 

இதில் எங்கிருத்து வந்தது காதல் ..............?