Showing posts with label இயல்பு. Show all posts
Showing posts with label இயல்பு. Show all posts

Thursday, October 11, 2012

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம் 

Tuesday, June 26, 2012

மனிதம் .



உருகும் சிந்தனை
கருகும் நிசம் ...
ஒய்யாரமாய் பிரச்சனைகள் ...

வழுக்கும் திட்டங்கள்
இழக்கும் மனிதர்கள்
அமைதியாய் சமுகம் ...

அவலம் அவலம் நம்
அடைகலம் மரணம்,

எடுத்து வை கொஞ்சம் தன்மானம்
உன் வருங்கால சந்ததிக்கு படிவமாக,

துறந்து போ, சொந்தம்
மறந்து போ '

எழதேரியாத நீ, என் விழுந்தாய் ?

Monday, April 23, 2012

என்ன இது


என்ன வலி இது போதும் போதும் 
கண்கள்  வற்றிவிட்ட குளமாய் மாறும் 
சுவாச குழலுக்குள்  ஏதோ அடைக்கும் 
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும், 

தூறல் நிற்கும்  வரை தூரம் நடந்தேன் 
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன் 
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன் 
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்..... 

Tuesday, October 5, 2010

முரண்

இருளை பற்றி எழுத போகிறேன்
அதற்கு
வெளிச்சம் வேண்டுமே .

Tuesday, September 28, 2010

கலியுகக் காதல்



பாவம் காதல் இன்று பாடாய் படுகிறது,
உணர்வு மறுத்த உலக இளைஞ்சர்களிடம் தவிக்கிறது.

கழிவறை சுகம் தான் காலைகடன் முடியும் வரை,
காதலும் சுகம் தான் தேகக் கடன் தீர்க்கும் வரை. 

இது போல அர்த்தங்கள் காதல் என்றும் கண்டதில்லை 
காதல் அழியும் கலியுகத்தை நான் என்றும் விரும்பவில்லை.