Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

Thursday, October 11, 2012

பொறு



ஓடும்போது உதிர்ந்த கால்கள் 
தோல்வி தொட பயப்படும் வாழ்க்கை 
செய்யாத தவறுக்கு சுருக்கு
வெட்கமாய் உள்ளுணர்ச்சி ,  

கண் வலிக்கும் வரை கனவும் 
எண்ண முடியாத கோடி நிறம் 
கண் திறக்க பயம் 
யானை கனவு ஏறும்பான மாயம் 

காலம் விரைந்தோட வழியில்லையோ 
வலி மறைந்தால் சுகம் இல்லையோ 
கொதிக்கும் முள்ள 
வெடிக்கும் சொல் 
தாங்கும்மா .. அம்ம்மம்ம்மா ...

மரம் விழுந்தால் நன்று 
கிளை முறிந்தால் வலி 
இகழும் நாற்றம் சுமந்த நேரம் 
வெகுள்ளி மனதிடம் வேதனை பேரம் 

Saturday, October 1, 2011

முரண்


விதவைக்கு வழி எங்கும் பூ தூவினர்
அவள் இறுதி ஊர்வலத்தில்.

Monday, January 17, 2011

கள்ளம்

பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .


மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.

அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.


தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .


அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.

நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.


கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.


கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.

Thursday, October 7, 2010

எழுச்சி

நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.

எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்

உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.