Thursday, February 3, 2011

புரிதல்

ஊழ்வினை உந்த என் இடம் மறந்தேன்
உன்னிடம் உன்னுள் ஒருநொடி மறந்தேன்
ஆணி  வேரென பூமி துளைத்து
ஆகாயம் தொட்ட காற்றாய் மகிழ்ந்தேன்
காதல் புரிந்ததில் காதல் புரிந்தது
தடையில்லா  அன்பில் புரிதல் வளர்ந்தது
த பதில் ஆ முன் அடி சுவைக்கும்
கவி இல்லா  தாள் என மனம் கிடக்கும்.