Monday, January 17, 2011

கள்ளம்

பொன் நிறை கவர்ந்து
செல்வனே ஆவான்,
இரவுரங்க கள்வன் கண் .


மண்சரிய உருளும் கல்யை
தொடநிழலின் கணம்
கள்வர் செயல்.

அறம் பிடியில் நிசம்
சொல்லியும் கள்வன்
பொருட்டு கதை.


தாழ்ஆழம், வெளியோட்டை,
நாய் கடைவிரல் அறிவன்,
களவிடும் முன்னம் .


அறமரிந்து பொய் தெரிந்தே
உரைப்பவன், கோமகனே
ஆயினும் கயவன்.

நேரடி கண் கதவடி
கான் இருப்பின், நோக்கின்றி
நுழைய கயவர்.


கார்சூழ்ந்து அசைய
மரமென மெய், ஊண்
கை களவாடும்.


கர்மமரிய கர்வம் கனக்கும் ஆதலால்
மர்மம் போதிக்கும் நிலை.

இலை மறை

பெண் கல்,
ஆண் உளி,
சில பாகம் சிதைத்து தான் 
சிற்பம் கொணரும்.  


Monday, January 3, 2011

தெய்வம்

உடல் கிழிந்த 
வலி மகிழ்ந்து,
உயிர்  உணவாய்
தந்த தாய்.