Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, April 23, 2012

என்ன இது


என்ன வலி இது போதும் போதும் 
கண்கள்  வற்றிவிட்ட குளமாய் மாறும் 
சுவாச குழலுக்குள்  ஏதோ அடைக்கும் 
கண்ணீர் மட்டும் இந்த காதலில் ஜெயிக்கும், 

தூறல் நிற்கும்  வரை தூரம் நடந்தேன் 
என்னை கொள்ளும் அந்த காலம் கடந்தேன் 
தாளம் தப்பிவிட்ட சுருதியாய் மெலிந்தேன் 
கண்கள் மூடி அந்த காதலை புதைத்தேன்..... 

Thursday, September 22, 2011

நாம் காதலிக்கவில்லை ...

உன் தூரத்து சிரிப்பால் கிளர்ச்சி ஆனேன்
காத்திருந்த போது  கவிஞன்ஆனேன்

தோள் உரச நடக்கும் போது மயக்கமானேன்
 ஆறுதல் காட்டும் போது அடிமையானேன்

முத்தமிடும் போது மோகமானேன் 
வேண்டாம் போ! என்ற போது வெறுத்து போனேன் 

நீ மட்டும் போதும் என்று பைத்தியமானேன் 
தாலி கட்டி உன் சொந்தமானேன் 

முதல் இரவில் காமமானேன்
பின் இரவில் பந்தமானாய் 

வருடங்கள் உருண்ட பின் என் நட்பானாய் 
முதுமையில் எனக்கு துணையானாய் 
இறந்த பின் என் தெய்வமானாய் 

இதில் எங்கிருத்து வந்தது காதல் ..............?








Wednesday, June 1, 2011

உன் சாயல்

தினம் செய்யும் பணிகளை
மனம் விரும்பாது
கனவெது  நிஜம் எது 
அது அறியாது


உன்னை எண்ணி இருக்கையில் 
உணர்வு  அறியாது 
சாலையோரம் வேலை நேரம் 
என  தெரியாது 

வரவில்லையே  நீ வரவில்லையே 
என ஏங்கி கொண்டிருப்பது 
என் தவறு இல்லையே

என் வாழ்வு நீ  இன்றி
என் உயிர் இல்லையே

Saturday, April 23, 2011

சுழ்நிலை மாற்றம்

வெறுக்கும் புது வெயில் 
ஊர்ந்து செல்லும் வாகனம், 

தெரியும் வரை சாலை நெரிச்சல் 
காதடைக்கும் ஒலிப்பான் சப்தம், 

எல்லாம் ரசித்தபடி என் வண்டியில் நான்
பின் இருக்கையில் என் காதலி ...




Monday, January 17, 2011

இலை மறை

பெண் கல்,
ஆண் உளி,
சில பாகம் சிதைத்து தான் 
சிற்பம் கொணரும்.  


Tuesday, July 20, 2010

கண்

இளமையின்   தூதர்கள்
மதனின் மைந்தர்கள்
கண்களே காதலை சேர்க்கும் கடவுள்கள் 

Friday, July 16, 2010

காதல் புரிதல்


நேரம்  ஊர்ந்து செல்ல 
முழுதாய் நானும் கொள்ள
கள்ளம் கடவுள் ஆனது 
பெண்மை காதல் தேடுது