Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது. 






No comments:

Post a Comment