Thursday, October 7, 2010

மறக்க நினைக்கிறன்.

காலை முதல் மாலை வரை உன்
நினைவு ஏங்குகிறது 
இரவான பொழுதிலே அது
ஏனோ ஓங்குகிறது 

பார்க்காத நாளெல்லாம் 
பரமாகி போனேன் 
பிரிவில் வளரும் நேசம் _உன்னில்
அடிமையாகி போனேன் 

அச்ச மற்ற மனதிற்கு 
அழகு கவிதை தந்தாய் _இன்று 
பேசாத பிரிவாலே 
அழவும் சொல்லித்தந்தாய்

கண்கள் மூடி பார்த்தாலும்  _அழுகை
நிற்க மறுக்குது
உள்ளுக்குளே வழிந்து சென்று 
நெஞ்சம் நிரப்புது. 






எழுச்சி

நீ விழிக்கும் வரை இரவு நீடிக்கும்
உன் உணர்வின் ஓர் புள்ளி,
மருந்து கொண்ட தீக்குச்சி போல் _ உரச
மறந்து போனால் பற்றாது.

எங்கிருந்து வந்தது ஒரு துளி நெருப்பில்
ஒருகோடி பூலோகம்

உணர்ச்சி உரச எழுச்சி தீ எரியும் _ அதில்
இருண்ட வாழ்க்கைக்கு பாதை தெரியும்.

Tuesday, October 5, 2010

அவமானம் மற


முரண்

இருளை பற்றி எழுத போகிறேன்
அதற்கு
வெளிச்சம் வேண்டுமே .

Tuesday, September 28, 2010

கலியுகக் காதல்



பாவம் காதல் இன்று பாடாய் படுகிறது,
உணர்வு மறுத்த உலக இளைஞ்சர்களிடம் தவிக்கிறது.

கழிவறை சுகம் தான் காலைகடன் முடியும் வரை,
காதலும் சுகம் தான் தேகக் கடன் தீர்க்கும் வரை. 

இது போல அர்த்தங்கள் காதல் என்றும் கண்டதில்லை 
காதல் அழியும் கலியுகத்தை நான் என்றும் விரும்பவில்லை. 


Thursday, September 23, 2010

சிகரெட்





புகைக்கும் போதே,
புதைந்து  கொண்டிருக்கிறேன் .