Wednesday, June 8, 2011

கனவினை நேசி



கனவினை நேசி  கனவினை நேசி 
உயிரோடு உருவான கனவினை நேசி 

பணம் காதல் பாசத்திற்கு கனவினை மறந்தோம்
எதோ ஒரு தொழில் செய்து வேசி போல் பிழைத்தோம் 

இரவெல்லாம் கனவினை கண்ணீரில் நினைத்தோம் 
யாருக்கும் தெரியாமல் மனதோடு புதைத்தோம் 

வலியோடும்   ரணமோடும்  முகம் தினம் சிரிக்கும் 
அடயாளம் தெரியாமல் கனவு தினம் அழுகும் 

கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம் 
விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம் 

இனியனும் தலை நிமிர்ந்து கனவினை நேசி 
மனமே நீ சுதந்திரமாய்   கனவினை நேசி






3 comments:

  1. கண் முன்னே கனவு இறக்க காப்பாற்ற மறந்தோம்
    விதிமேலே பழி வைத்து மீள துயர் கொண்டோம்
    ungal varigallai parthu kannavae kan kasakiyathu

    ReplyDelete
  2. Thanks For the comments Chiranjeevi and Aravind Creats.

    ReplyDelete